12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் - ஊரக வளர்ச்சி துறை பணியாளர் சங்க மாநில தலைவர் தகவல்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி சென்னையில் தர்ணா போராட்டம் நடக்கிறது என்று ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் தெரிவித்தார்.
வாடிப்பட்டி
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி சென்னையில் தர்ணா போராட்டம் நடக்கிறது என்று ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் தெரிவித்தார்.
காலமுறை ஊதியம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதி அரசாணை வெளியிட வேண்டும். மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலமும் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து சலுகை மற்றும் ஊராட்சி செயலாளருக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ரூ.15,000 கால முறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வின் போது ஒட்டுமொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும்.
தர்ணா போராட்டம்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச காலம் முறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முன் கள பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர், தூய்மை பணியாளர், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.