அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி தாய் கண்எதிரே மகன் இறந்த சோகம்


அயோத்தியாப்பட்டணம் அருகே  கிணற்றில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி  தாய் கண்எதிரே மகன் இறந்த சோகம்
x

அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டியை அடுத்த கருமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 53), விவசாயி. இவருடைய மனைவி வசந்தா (50). இவர்களின் மூத்த மகன் சுரேஷ் (32). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது தாயார் வசந்தாவுடன் கிணற்றில் இருந்து விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது தாயார் வசந்தா கண்எதிரே கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் தண்ணீரில் தத்தளித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த காரிப்பட்டி போலீசார், வாழப்பாடி தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மிதந்த சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விவசாயி வேலு கொடுத்த புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story