சோளிங்கரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா

சோளிங்கரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
சோளிங்கரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அவரது உருவப்படத்துக்கு ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி துணைத் தலைவர் மணி வேலு, மாவட்ட செயலாளர் அருண், விவசாய அணி ரவிச்சந்திரன், நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் கோபால், செங்கல் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story