வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி


வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் ஸ்டேட் பாங்க் காலனி, திருஞானசம்ந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் வேலை உள்ளதாகவும், வேலையில் சேர்பவர்களுக்கு மாத சம்பளம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இதற்கு டெபாசிட் தொகையாக ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் எனவும் அந்த விளம்பரத்தில் கூறியிருந்ததாக தெரிகிறது. இதை நம்பி மேட்டூரை சேர்ந்த நடராஜன் (வயது36), ஓமலூர் தாலுகா சாமி நாயக்கன்பட்டி அடிக்கரை பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (30) ) ஆகியோர் தலா ரூ.3 லட்சம் கட்டினர். அவர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசில் அவர்கள் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story