ரெயிலில்அடிபட்டுதனியார் நிறுவனஊழியர் சாவு


தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயிலில்அடிபட்டுதனியார் நிறுவனஊழியர் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கணேசன் காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் கணபதி (வயது 22). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் இவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் மீளவிட்டான்-துறைமுகம் இடையே உள்ள பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது மீளவிட்டானில் இருந்து வ.உ.சி. துறைமுகம் நோக்கி சென்ற ரெயில் என்ஜின், எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story