நெடுஞ்சாலைத்துறை ஊழியர் தற்கொலை

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே கீழபளுவஞ்சியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 53). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். முத்துகிருஷ்ணனுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story