குலசேகரன்பட்டினம் கோவில் முன்புமயங்கி விழுந்த பெண் சாவு


குலசேகரன்பட்டினம் கோவில் முன்புமயங்கி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் கோவில் முன்பு மயங்கி விழுந்த பெண் இறந்து போனார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு கடந்த 5-ந் தேதி சுமார் 56 வயது மதிக்கதக்க பெண் வந்துள்ளார். அவர் கோவில் முன்புறம் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந்்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார்? இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story