தூத்துக்குடியில் தீயில் கருகிய மூதாட்டி சாவு


தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தீயில் கருகிய மூதாட்டி இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 70). இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதமாக படுக்கையாக இருந்தாராம். சம்பவத்தன்று இவர் வீட்டில் கொசுவர்த்தி கொழுத்தி வைக்க முயன்றாராம். அப்போது எதிர்பாராத விதமாக போர்வையில் தீப்பிடித்து உள்ளது. இதில் உடல் கருகிய அந்தோணியம்மாள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story