அரூர் அருகே சாலை பணியை அதிகாரி ஆய்வு


அரூர் அருகே சாலை பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

தர்மபுரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான அரூர்-திருவண்ணாமலை சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலையில் சிறு பாலங்கள் அமைத்தல், தடுப்பு சுவர்கள் மற்றும் சாலையின் தரம், அகலம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தர்மபுரி தரக்கட்டுபாட்டு உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story