விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x

விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 204 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தலைமையில் விதை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பாடாலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களின் 100 எண்கள் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விதையின் தரம் சோதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது வரை 308 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் விதை விற்பனையாளர்கள் விதை விற்பனையின்போது ரசீது வழங்குதல், இருப்பு பதிவேடு பராமரிப்பு, விதை கொள்முதல் விவரங்கள், பதிவு சான்றிதழ், முளைப்புத்திறன் சான்று வைத்திருத்தல், விற்பனை பலகையில் விதை இருப்பு விவரம், விற்பனை விலை ஆகியவற்றை எழுதி வைத்திருக்க வேண்டும். அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. இதில் ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டால், விதைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கீதா, விதை ஆய்வாளர்கள் பிரகாஷ் மற்றும் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story