ஓசூரில் அங்கன்வாடி ஊழியரிடம் நகை பறிப்பு



ஓசூர்
ஓசூர் திருப்பதி மெஜஸ்டிக் பகுதியை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மனைவி உதயசெல்வி (வயது36). இவர், ஓசூர் பகுதியில் அங்கன்வாடி மைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை அவர் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உதயசெல்வியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து உதயசெல்வி, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire