கட்டப்பை வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு


கட்டப்பை வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை, ரொக்கம் திருட்டு
x

திருவண்ணாமலையில் கட்டப்பை வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை, ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கட்டப்பை வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை, ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

வியாபாரி

திருவண்ணாமலை வேல் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் இணைந்து சேலத்தில் இருந்து கட்டப் பை வாங்கி வந்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 24-ந் தேதி மூர்த்தியும், அவரது மனைவியும் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தனர். மறுநாள் அதிகாலை வீடு திரும்பிய இவர்கள் அசதியில் படுத்து தூங்கி விட்டனர்.

25-ந் தேதி காலையில் அவர்கள் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக சென்ற போது பீரோவின் கதவு ெநம்பி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது,.

திருட்டு குறித்து துப்பு துலக்குவதற்காக கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ மற்றும் கதவில் பதிவாகியிருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


Next Story