கோவில்பட்டி காமராஜ் இன்டர் நேஷனல் பள்ளி அணி வெற்றி
கால்பந்து போட்டியில் கோவில்பட்டி காமராஜ் இன்டர் நேஷனல் பள்ளி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தென்காசி வேல்ஸ் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி அணி 2-வது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், முதல்வர் ஜெயக்குமார், செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் கண்ணன், கமிட்டி உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story