மீனவருக்கு அடி-உதை

தூத்துக்குடியில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மீனவருக்கு அடி-உதை விழுந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியை சேர்ந்தவர் நம்பிவேல் (வயது 28). மீனவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும் முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி உள்ளனர். அப்போது, நம்பிவேல், கிருஷ்ணனை முந்தி சென்று மதுவாங்கினாராம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணன், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் சேர்ந்து சுனாமி காலனியில் நின்று கொண்டு இருந்த நம்பிவேலை அடித்து உதைத்தார்களாம். இதில் காயம் அநை்த நம்பிவேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story