கல்லூரி மாணவி கடத்தலா ? போலீசார் விசாரணை



கல்லூரி மாணவி கடத்தலா ? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல் அருகே பிராம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மகள் பவர்லீனா சர்மி (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பவர்லீனா சர்மியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire