மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

16 வயது சிறுமி கர்ப்பம்

தஞ்சை அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது நிரம்பிய கூலி தொழிலாளி. இவர் தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் கர்ப்பத்தையும் கலைத்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரணை நடத்தி, ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.


Next Story