அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
x

வெம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

வெம்பாக்கம் தாலுகா தூசி நத்த கொல்லை கிராமம் காவாங்கரை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாமண்டூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மூன்று கண் பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் நடராஜன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவருக்கு மனோன்மணி என்ற மகனும், நிதியா என்ற மகளும் முத்துக்குமரன் என்ற மகனும் உள்ளனர்.

இது தொடர்பாக மகன் முத்துக்குமரன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story