மது விற்றவர் கைது



பூதப்பாண்டி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் நேற்று காலையில் பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈசாந்திமங்கலம் மேலூர் பகுதியை சோந்த வேலாயுதம் (வயது 55) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 25 மது பாட்டில்கள் மற்றும் மது விற்பனையில் கிடைத்த ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire