மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

ஆரணி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த சதுப்பேரி பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செல்வராஜ் (வயது 60) என்பவரின் வீட்டில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story