அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளம்பர பதாகை கிழிப்பு; 2 பேர் கைது


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  விளம்பர பதாகை கிழிப்பு; 2 பேர் கைது
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளம்பர பதாகை கிழிப்பு சம்பந்தமாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் விளம்பர பதாகை இருந்தது. அதனை அதே பகுதியை சேர்ந்த பரணிகுமார் (வயது 22), நிஷாந்த் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரணிகுமார், நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story