3 வயது மகனுடன் தாய் மாயம்



3 வயது மகனுடன் தாய் மாயம் ஆனார்.
கரூர் சேங்கல் பகுதியை சேர்ந்தவர் மருதை. இவரது மகள் செல்லம்மாள் (வயது 24). இவரது மகன் விஜய் (3). இந்தநிலையில் செல்லம்மாள் தனது மகன் விஜயை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் செல்லம்மாளும், விஜய்யும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருதை கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிந்து மாயமான தாய், மகனை தேடி வருகின்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire