மோட்டார் சைக்கிள் திருடர் சிக்கினார்


தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாளமுத்துநகரில் மோட்டார் சைக்கிள் திருடர் சிக்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே சாமி நகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் நடராஜன் (வயது 28). இவர் கடந்த 21.1.2023 அன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்த செல்வக்குமார் மகன் மாரியப்பனை (21) கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாரியப்பன் மீது திருட்டு, கஞ்சா உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story