உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உமரிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், கோவில்களையும் சுத்தப்படுத்தினர். ஏரல் அரசு மருத்துவமனை டாக்டர் விஜய் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். ஆசிரியை கீதா பள்ளிக்கு 12 மின்விசிறிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பன்னீர் செல்வி, திட்ட அலுவலர் விவேகானந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்களும், ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.


Next Story