போடி அருகே முதியவர் மீது தாக்குதல்


போடி அருகே  முதியவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே முதியவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

‌ போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 60). இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் ராஜா (50). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முத்துச்சாமியை, ராஜா தகாத வார்த்தைகளால் பேசி கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்துச்சாமி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்‌. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story