போடி அருகே முதியவர் மீது தாக்குதல்



போடி அருகே முதியவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 60). இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் ராஜா (50). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முத்துச்சாமியை, ராஜா தகாத வார்த்தைகளால் பேசி கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்துச்சாமி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire