குஜிலியம்பாறை அரசு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்


குஜிலியம்பாறை அரசு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
x

குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமை பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தொடங்கி வைத்தார்.

முகாமையொட்டி அய்யாக்கண்ணூர் சாலை, ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் வளாகம், குஜிலியம்பாறை கால்நடை மருந்தக வளாகம், எஸ்.புதூர் அங்கன்வாடி மைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் முட்புதர்களையும், செடி, கொடிகளையும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

முன்னதாக குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story