கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவைத்தொடா்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும், கள்ளழகருக்கு எதிர்சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது. வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் இடமான ஆழ்வாா்புரம் பகுதியில் செய்யப்பட உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீா் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் அறநிலையத்துறை, கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்