முதியவர் பிணம்


முதியவர் பிணம்
x

தாழையூத்து அருகே முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

தாழையூத்து பண்டாரகுளம் இசக்கியம்மன் கோவில் அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாரணம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வி, தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story