தீக்குளித்து மூதாட்டி தற்கொலை


தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
x

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி புஷ்பம் (வயது 74). இவர் முதுமை காரணமாக இடுப்பு மற்றும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மூதாட்டி புஷ்பம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி புஷ்பம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story