சமையல் கியாஸ் கசிந்து விபத்து; தீயில் கருகிய மூதாட்டி சாவு


சமையல் கியாஸ் கசிந்து விபத்து; தீயில் கருகிய மூதாட்டி சாவு
x

தேனி அருகே சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி பலியானார்.

தேனி

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி சகுந்தலா (வயது 76). இவர் கடந்த 12-ந்தேதி தனது வீட்டில் கியாஸ் அடுப்பில் டீ போட முயன்றார். அப்போது கியாஸ் கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. அடுப்பை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டபோது கியாஸ் கசிவால் அவரது மேல் தீப்பற்றியது.

பலத்த தீக்காயங்களுடன் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் ராம்குமார் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story