ஆடி முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்


ஆடி முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
x

ஆடி முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ஈரோடு

ஈரோட்டில் ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். ஒருசில பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தரிசனம்

இதேபோல் ஈரோடு அசோகபுரம் மழை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் மற்றும் திருநகர் காலனி முத்துமாரியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் ஈரோடு நேதாஜி நகர் வேப்பமரத்து மாரியம்மன் மற்றும் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story