கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் பூரண சந்திரன் (வயது 48) பேக்கேஜிங் தொழில் செய்து வரும் இவர் சொந்த ஊர் விருதுநகர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி ஆகும். இவர் அப்பையநாயக்கன்பட்டியில் தனது தாயாரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார். தாயாரை பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக மன்னார்கோட்டை விலக்கு அருகே வந்த போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தில் மோதியதில் பூரண சந்திரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி இவரது மகன் பிரவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் காரை ஓட்டி வந்த பொம்மையாபுரத்தை சேர்ந்த மூக்கையா (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இ்ந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story