சாதனை படைத்த மாணவர்கள்


சாதனை படைத்த மாணவர்கள்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்

தென்காசி

சுரண்டை:

கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீஜெயந்திரா பள்ளி கைப்பந்து அணியினர் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து தென்காசியில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் இதே அணியினர் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற ஜெயேந்திரா பள்ளி கைப்பந்து குழுவில் இடம் பெற்ற மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்களை தாளாளர் டாக்டர் விஜயன் அருணகிரி, முதல்வர் ஞானமணிதுரைச்சி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பாராட்டினர்.



Next Story