தூத்துக்குடியில்பள்ளிக்கூடத்துக்கு மக்கள் சீர்வரிசை


தூத்துக்குடியில்பள்ளிக்கூடத்துக்கு மக்கள் சீர்வரிசை
x

தூத்துக்குடியில்பள்ளிக்கூடத்துக்கு மக்கள் சீர்வரிசை வழங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் சீர் வரிசை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ராஜகோபால்நகர் சேகரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் ஜெபக்குமார் ஜாலி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு பண்டாரம் பட்டி கிராம மக்களும், முன்னாள் மாணவர்களும் பள்ளிக்கூடத்துக்கு தேவையான நாற்காலிகள், தரை விரிப்புகள், கம்ப்யூட்டர் பிரிண்டருக்கு தேவையான மை, பேப்பர் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து வழங்கினர். அதனை தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story