போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை

வேலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவர் வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். இவரது மனைவி அமலா (வயது 50). இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story