சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,100-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,100-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,100-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 1½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,100-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.110-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Next Story