சமயபுரம் பகுதியில் நாளை மின்தடை

சமயபுரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி. நகர் பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மாருதிநகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜாநகர், செல்லதமிழ்நகர், ஆனந்தநகர், அகிலாண்டபுரம், பரஞ்ஜோதிநகர், கூத்தூர், நொச்சியம், பழூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கபட்டி, கோவத்தகுடி, பனமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுபத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.