கடலூரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்இன்று நடக்கிறது


கடலூரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

கடலூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கடலூர்


கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க இருக்கிறது.

இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story