பொதுப்பணித்துறை ஊழியர் தற்கொலை

பொதுப்பணித்துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் பொதுப்பணி துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். விஜய் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, மனமுடைந்த விஜய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி நந்தினி கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.