மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியது


மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியது
x

மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கியது

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த மகாராஜபுரத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக வலை வீசப்பட்டு இருந்தது. இந்த வலையில் ஒரு மலைப்பாம்பு சிக்கி இருந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் அசோக், வேட்டை தடுப்பு காவலர் பிரவின் ஆகியோர் விரைந்து சென்று அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் வலையில் இருந்து பாம்பை மீட்டனர். இந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது. தொடர்ந்து அதை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story