சமரச தின விழிப்புணர்வு பேரணி

சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர்
உலக சமரச தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பணிகள்ஆணைய அறிவுறுத்தலின் பேரில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமரச மைய வழிகாட்டுதலின்படி சமரசத்தை வலியுறுத்தி அரசுதொழிற்பயிற்சி மாணவர்கள் பேரணியாக சென்றனர். சூலக்கரையில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் நடந்து சென்றார். இப்பேரணியில் விருதுநகர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜகுமாரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சிந்துமதி, குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கவிதா, வக்கீல்கள், கல்வி நிறுவன முதல்வர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது ஆயுதப்படைதிடல் வழியாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story