ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலருக்கு அடி-உதை

ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலருக்கு அடி-உதை விழுந்தது.
திருநெல்வேலி
திசையன்விளை:
தூத்துக்குடி முனியசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 66). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவருக்கும் திசையன்விளை அருகே உள்ள சுவிஷேசபுரம் ரத்தினம் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முத்துசாமி, அவரது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சுவிஷேசபுரத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்துள்ளார். அவர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அவரை ரத்தினம் அவதூறாக பேசி செருப்பால் அடித்து உதைத்ததாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story