தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி அருகே சனிக்கிழமை  மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத் தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story