200 கால்நடைகளுக்கு தோல் கழலை தடுப்பூசி

ராஜந்தாங்கல் ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 200 கால்நடைகளுக்கு தோல் கழலை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேட்டவலம்
ராஜந்தாங்கல் ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 200 கால்நடைகளுக்கு தோல் கழலை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சியில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் ராஜ்குமார் வரவேற்றார்.
முகாமில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட வல்லுனர் வேலு மற்றும் கணக்காளர் காமாட்சி, கால்நடை பயிற்சியாளர் ஜீவிதா ஆகியோர் கால்நடைகளுக்கான முதலுதவி பெட்டகங்கனை வழங்கினர்.
பின்னர் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர்் தீபிகா, கால்நடை ஆய்வாளர் பழனிவேல், செயற்கை முறை கருவூட்டாளர் சிவானந்தம் ஆகியோர் கொண்ட குழுவினர் 200 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய்க்கான தடுப்பூசி செலுத்தினர்.
மேலும் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டனர். முடிவில் பால் கூட்டுறவு சங்க செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.