ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஓமலூர் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம்

சேலம்:

ஓமலூர் அருகே உள்ள கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 37). இவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மோகனை கைது செய்தனர்.


Next Story