தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்


தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
x

தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஜங்ஷன்ரெயில் நிலையத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலம் முதல் ஈரோடு வரை தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது டி-3 முன்பதிவில்லாத பெட்டியின் கழிவறை அருகே ஒரு பை கிடந்தது. இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பையை யார் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை. இதையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை சேலம் போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story