போதையில் ஓட்டல் சப்ளையரின் கழுத்து அறுப்பு

திருப்பத்தூரில் போதையில் ஓட்டல் சப்ளையரின் கழுத்தை அறுத்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
திருப்பத்தூரை அடுத்த ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் மகன் அன்சர் (வயது 38). இவர் புதுப்பேட்டை சாலையில் ஒரு தனியார் ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ் (40 என்பவர் நேற்று முன்தினம் மதியம் மது போதையில் ஓட்டலுக்கு வந்துள்ளார். அவர் இரண்டு ஸ்பெஷல் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதற்கான தொகை ரூ.120-ஐ அன்சர் கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பைரோஸ், அவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
திரும்பவும் நேற்று மந்திரம் இரவு சுமார் 10 மணி அளவில் ஓட்டலுக்கு வந்த பைரோஸ், என்னிடம் பணம் கேட்கிறாயா என்று கூறி வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்சரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அன்சரை ஓட்டலில் இருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைரோஸை தேடி வருகின்றனர்.