பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மதுரை மகபூப்பாளையம், நெல்பேட்டை, காஜிமார்தெரு, கோரிப்பாளையம், ஆனையூர், தபால்தந்திநகர், வள்ளுவர் காலனி மற்றும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, சிலைமான், வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திறந்த வெளி திடல்களிலும், பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மதுரை அரசரடி யூ.சி.பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்புத் தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு தொழுகை
பின்னர் உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.