கட்டிட தொழிலாளி திடீர் சாவு


கட்டிட தொழிலாளி திடீர் சாவு
x

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியகொம்மேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). கட்டிட வேலை செய்து வநிதார். இவரது மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். ஏழுமலைக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story