ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


ராயக்கோட்டை அருகே  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பழையூர் கினியன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23.) தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story