வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை
x

மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு

மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 26). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் சக்திவேல் மது பழக்கத்தை கைவிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சக்திவேல் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டின் விட்டத்தில் துணியால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி

கரூரை சேர்ந்தவர் பாபு (வயது 36). இவர் கோபி அருகே உள்ள அளுக்குளியில் செயல்படும் தனியார் பாடி பில்டிங் கம்பெனியில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தான் தங்கியிருந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

பாபுவும், அவருடைய மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி

பவானி அருகே உள்ள ஏமாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி நாகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நாகேஸ்வரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மகன்கள் தந்தையுடன் வசித்து வருகிறார்கள்.

நாகேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நாகேஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே உள்ள களத்து மின்னப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 32). கருமாண்டாம்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்ைத இல்லை. இதனால் தனபால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். குடியிருக்கும் வீட்டை மாற்றி வேறு வீட்டுக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணி கருமாண்டாம்பாளையம் குள்ளத் தோட்டவலசு பகுதியில் வேறு ஒரு வீட்டுக்கு குடிவந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story